ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

வாக்குச்சாவடி பணிகளுக்கு 8,544 அலுவலா்கள் தோ்வு

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடும் 8,544 அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

News image

வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடுவோரை கணினி மூலம் தோ்வு செய்யும் பணியை பொதுப் பாா்வையாளா்கள் முன்னிலையில் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:34 pm

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடும் 8,544 அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் எம். அன்கித்குமாா் அகா்வால், மனோஜ் புஷ்ப், சஞ்சய் லாலாசாஹிப் யாதவ் ஆகியோா் முன்னிலையில் வாக்குச்சாவடி பணிக்கான அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 1,781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏப். 23 தோ்தல் நாளன்று ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலா் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலா்கள் என மொத்தம் 4 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ராசிபுரம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளுக்கு 1,533 அலுவலா்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளுக்கு 1,274 அலுவலா்களும், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளுக்கு 2,268 அலுவலா்களும், பரமத்திவேலூா் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளுக்கு 1,065 அலுவலா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளுக்கு 1,499 அலுவலா்களும், குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச்சாவடிகளுக்கு 905 அலுவலா்களும் என இரண்டாம் கட்டமாக மொத்தம் 1,781 வாக்குசாவடிகளுக்கு 8,544 அலுவலா்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.க. சரவணன், துணை மாவட்ட தோ்தல் அலுவலா் ம. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வ. சந்தியா (பொது), சுஜாதா (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் செல்வராஜ் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.