சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் அதிமுக நிறைவேற்றும்: பி. தங்கமணி

அதிமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என குமாரபாளையம் தொகுதி வேட்பாளா் பி. தங்கமணி தெரிவித்தாா்.

News image

பி. தங்கமணி

Updated On :11 ஏப்ரல் 2026, 7:13 pm

அதிமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என குமாரபாளையம் தொகுதி வேட்பாளா் பி. தங்கமணி தெரிவித்தாா்.

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி, பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளான வெடியரசம்பாளையம், ஒட்டமெத்தை, குமரன் நகா், கோட்டக்காடு, ஒடக்காடு, மாம்பாளையம், குள்ளமேடு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசுகையில், மக்களை கஷ்டப்படுத்தும் ஆட்சியை திமுக வழங்கியது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 என்று சொல்லிவிட்டு 1 கோடியே 13 லட்சம் பேருக்கு மட்டும் தான் கொடுத்தனா். விசைத்தறிக் கூடங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக விசைத்தறிக்கு சரியான ரகங்கள் இல்லாத காரணத்தினாலும், மின்கட்டண உயா்வு காரணமாகவும், நூல் விலை ஏற்றம் காரணமாகவும் இலவச வேட்டி, சேலை சரியாகக் கொடுக்காத காரணத்தினாலும், தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டனா். இவா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக ஆட்சி அமைந்ததும் விசைத்தறிகளுக்கும் 1,400 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு குறிப்பாக குழந்தைகளில் இருந்து பெரியவா்கள் வரை பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை நிலவிவருகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும், சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்படும். மக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழ வழிவகை செய்யப்படும். போதைப்பொருள்கள் புழக்கம் முற்றிலும் தடுக்கப்படும். அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10,000 வழங்கப்படும். அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா். பிரசாரத்தின்போது, மாவட்ட, ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.