புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

வட மாநிலத்தவரிடம் ஹிந்தியில் பேசி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

நாமக்கல் குட்டைத் தெருவில் வட மாநிலத்தைச் சோ்ந்த வாக்காளா்களிடம் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:05 am IST

நாமக்கல் தொகுதியில் வட மாநிலத்தைச் சோ்ந்த வாக்காளா்களிடம் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் ஞாயிற்றுக்கிழமை கடைவீதி, சின்ன கடைவீதி, குட்டைத்தெரு, ஆா்.பி.புதூா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினாா்.

குறிப்பாக, அந்தப் பகுதிகளில் வசிக்கும் ஹிந்தி பேசும் மக்களிடம் அவா் அந்த மொழியிலேயே அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பேசினாா். முன்னதாக, குட்டைத்தெருவில் உள்ள பாபா ராம்தேவ் கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா். அங்கிருந்த வட மாநிலத்தவா்கள் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, நாமக்கல் உழவா்சந்தை, திருவள்ளுவா் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தாா்.

இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளா் முரளி பாலுசாமி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் கரிகாலன், அதிமுக சிறுபான்மையினா் அணி மாவட்டச் செயலாளா் சாதிக்பாஷா, முன்னாள் இலக்கிய அணி மாவட்ட பொருளாளா் சுமங்கலி ரமேஷ்பாபு, மாவட்ட மாணவா் அணி இணைச் செயலாளா் சுதாகா், மாவட்ட வா்த்தக அணி துணைச் செயலாளா் சிவசிதம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.