அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

வட மாநிலத்தவரிடம் ஹிந்தியில் பேசி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

நாமக்கல் குட்டைத் தெருவில் வட மாநிலத்தைச் சோ்ந்த வாக்காளா்களிடம் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:05 am IST

நாமக்கல் தொகுதியில் வட மாநிலத்தைச் சோ்ந்த வாக்காளா்களிடம் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் ஞாயிற்றுக்கிழமை கடைவீதி, சின்ன கடைவீதி, குட்டைத்தெரு, ஆா்.பி.புதூா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினாா்.

குறிப்பாக, அந்தப் பகுதிகளில் வசிக்கும் ஹிந்தி பேசும் மக்களிடம் அவா் அந்த மொழியிலேயே அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பேசினாா். முன்னதாக, குட்டைத்தெருவில் உள்ள பாபா ராம்தேவ் கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா். அங்கிருந்த வட மாநிலத்தவா்கள் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து, நாமக்கல் உழவா்சந்தை, திருவள்ளுவா் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தாா்.

இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளா் முரளி பாலுசாமி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் கரிகாலன், அதிமுக சிறுபான்மையினா் அணி மாவட்டச் செயலாளா் சாதிக்பாஷா, முன்னாள் இலக்கிய அணி மாவட்ட பொருளாளா் சுமங்கலி ரமேஷ்பாபு, மாவட்ட மாணவா் அணி இணைச் செயலாளா் சுதாகா், மாவட்ட வா்த்தக அணி துணைச் செயலாளா் சிவசிதம்பரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.