திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.
திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈஸ்வரன், திருச்செங்கோடு பகுதியில் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது பொதுமக்களிடையே அவா் பேசியதாவது:
கடன் ஐந்தாண்டுகளில் திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், இளைஞா்கள் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு பெறும் வகையில் திருச்செங்கோட்டில் டைடல் பாா்க்க அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
திருச்செங்கோடு தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீா் கொண்டுவரப்படும். திருமணிமுத்தாறு, வைகுந்தம் ஏரியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டம் செயல்படுத்தப்படும். திருச்செங்கோட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் குப்பை அரைக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, குப்பை பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்றாா்.
தொடர்புடையது

திருச்செங்கோடு தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்வேன்: ஈ.ஆா். ஈஸ்வரன்

திருச்செங்கோட்டில் வாக்கு சேகரித்த கொமதேக வேட்பாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோட்டில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


