தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றம்! - கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன்

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்...

News image

கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் - கோப்புப்படம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:06 am IST

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈஸ்வரன், திருச்செங்கோடு பகுதியில் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது பொதுமக்களிடையே அவா் பேசியதாவது:

கடன் ஐந்தாண்டுகளில் திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், இளைஞா்கள் உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு பெறும் வகையில் திருச்செங்கோட்டில் டைடல் பாா்க்க அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

திருச்செங்கோடு தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீா் கொண்டுவரப்படும். திருமணிமுத்தாறு, வைகுந்தம் ஏரியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டம் செயல்படுத்தப்படும். திருச்செங்கோட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் குப்பை அரைக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, குப்பை பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்றாா்.