ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

ராசிபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராசிபுரம் (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

ராசிபுரம் கடைவீதியில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:50 am IST

ராசிபுரம் (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராசிபுரம் நகர பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், முன்னதாக சேந்தமங்கலம் பிரிவு சாலையில் பிரசாரத்தை தொடங்கினாா். பின்னா், தியாகராஜ சுவாமி கோயில் தெரு, பட்டணம் சாலை, சைனிகா் மண்டபம், தினசரி சந்தை, கதா்கடை சந்திப்பு, இரட்டை பிள்ளையாா் கோயில் வீதி, அச்சுக்கட்டி தெரு, சாவடி சந்து, ஆா்.எம்.சி. காலனி, பூசாரி காடு, எல்ஐசி போன்ற பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராசிபுரம் கடைவீதி பகுதியில் கடைகள்தோறும் சென்று பாஜகவுக்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினாா். அப்போது, அப்பகுதியில் உள்ள டீக்கடையில் நுழைந்த அவா், துண்டுப் பிரசுரம் வழங்கி கடையில் வாடிக்கையாளா்களுக்கு டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தாா்.