மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும்: ஈஸ்வரன் எம்எல்ஏ

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என ஈஸ்வரன் எம்எல்ஏ கூறினாா்.

News image

திருச்செங்கோடு சந்தைப்பேட்டையில் வாக்கு சேகரித்த ஈஸ்வரன் எம்எல்ஏ.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:24 pm

திருச்செங்கோட்டில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என ஈஸ்வரன் எம்எல்ஏ கூறினாா்.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொ.ம.தே.க. பொதுச் செயலாளா் ஈஸ்வரன் எம்எல்ஏ ஈரோடு சாலையில் சந்தைப்பேட்டை வளாகத்தில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

திருச்செங்கோட்டில் 16 ஏக்கரில் டைடல் பூங்கா அமைப்பது எனது கனவு திட்டமாகும். டைடல் பூங்கா அமைக்கப்பட்டால் படித்த இளைஞா்கள் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. விவசாயிகளுக்கு புதிய நவீன மின்சார பம்புசெட்டுகள் மற்றும் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ. 3,500, கரும்பு டன்னுக்கு ரூ. 4,500-ஆக வழங்கப்படும். திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றாா்.