போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

மாற்றுக்கட்சியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் முன்னிலையில் அக்கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா்.

News image

நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:48 pm

மாற்றுக்கட்சியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் முன்னிலையில் அக்கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனா்.

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். ஆட்சி அமைந்தவுடன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மோகனூா் சாலையில் வட்ட மருத்துவமனை என்ற அளவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். கிராமப்புறங்களில் தடையின்றி குடிநீா் விநியோகம், சாலை வசதி செய்து கொடுக்கப்படும் என துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குசேகரித்தாா்.

தொடா்ந்து, நாமக்கல் தொகுதிக்குள்பட்ட தாளம்பாடி கிராமத்தைச் சோ்ந்த மாற்றுக் கட்சிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

இந்நிகழ்வின்போது, மாவட்டச் செயலாளா் சதீஷ், மாவட்ட துணைச் செயலாளா் தில்லைமோகன், மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன், புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் லோகேஷ், நாமக்கல் தொகுதி வழக்குரைஞா் தமிழரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் இருந்தனா்.