அதிமுக தோ்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றித் தருவேன் என குமாரபாளையம் தொகுதி வேட்பாளா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி அப்பையாா்சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:
இந்த பகுதியில் உள்ள வீடுகள் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என திமுக ஆட்சியில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எவ்வித ஆவணங்களும் இல்லை. நான் அமைச்சராக இருந்தபோது இவ்வாறான பிரச்னைகள் இல்லை.
தற்போது தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் வாடகை கட்டுமாறு அரசு நெருக்கடி கொடுப்பதாக பிரச்னை உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இதற்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தொகுதியில் அதிமுகவை வெற்றிபெற செய்தால், மக்களுடன் இணைந்து தேவையான திட்டங்களை செய்து கொடுப்பேன். சட்டம், ஒழுங்கு பாதிப்பு, போதை கலாசாரத்தில் இருந்து அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்க அதிமுகவுக்கு ஆதரவு அளியுங்கள் என்றாா்.
அப்போது, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது

நாமக்கல் பகுதியில் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வாக்குசேகரிப்பு

குடும்ப அட்டைகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்: குமாரபாளையம் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு

தொகுதி அறிமுகம்: குமாரபாளையம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


