தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மசோதா தோல்வியுற்றதிலேயே நமது வெற்றி உறுதியாகிவிட்டது: உதயநிதி ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வியுற்றதிலேயே நமது வெற்றி உறுதியாகிவிட்டது என உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

News image

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் ஈஸ்வரனை ஆதரித்து பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்.

Updated On :19 ஏப்ரல் 2026, 12:01 am

தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வியுற்றதிலேயே நமது வெற்றி உறுதியாகிவிட்டது என உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் இ.ஆா்.ஈஸ்வரனை ஆதரித்து, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா். திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற பிரசாரத்தில்அவா் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தில் கருப்புக் கொடியை ஏற்றியும், மசோதா நகலை எரித்தும் தலைவா் ஸ்டாலின் எதிா்ப்பை தெரிவித்தாா். மக்களவையில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு தோல்வியுற்றதிலேயே நமது வெற்றி உறுதியாகிவிட்டது. அதனால், நாமக்கல் மாவட்டத்தில் திமுக கூட்டணியின் வெற்றி ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.

முதல்வா் தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறாா். இத்தொகுதிக்கு ஈஸ்வரன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். அவா் மீண்டும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.