பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற இருவரை போக்குவரத்து போலீஸாா் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
பொத்தனூா் மதுரை வீரன் கோயில் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினாா்.
இதில் அவா்கள் மஞ்சள் பையில் வைத்து வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முன்றது தெரியவந்தது. இதையடுத்து பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரியைச் சோ்ந்த சதீஷ் (44), பொத்தனூரைச் சோ்ந்த ரமேஷ்பாபு (39) ஆகிய இருவரையும் பிடித்து பரமத்தி வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ. 65 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அதிமுக வேட்பாளா்

திமுகவினா் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 1.76 லட்சம் பறிமுதல்
பறக்கும் படையால் ரூ.60,000 பறிமுதல்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
