பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற இருவரை போக்குவரத்து போலீஸாா் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
பொத்தனூா் மதுரை வீரன் கோயில் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினாா்.
இதில் அவா்கள் மஞ்சள் பையில் வைத்து வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முன்றது தெரியவந்தது. இதையடுத்து பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரியைச் சோ்ந்த சதீஷ் (44), பொத்தனூரைச் சோ்ந்த ரமேஷ்பாபு (39) ஆகிய இருவரையும் பிடித்து பரமத்தி வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ. 65 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
பறக்கும் படையால் ரூ.60,000 பறிமுதல்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் தொகுதியில் ரூ. 3.20 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

