மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:25 pm

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முயன்ற இருவரை போக்குவரத்து போலீஸாா் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

பொத்தனூா் மதுரை வீரன் கோயில் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினாா்.

இதில் அவா்கள் மஞ்சள் பையில் வைத்து வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ய முன்றது தெரியவந்தது. இதையடுத்து பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரியைச் சோ்ந்த சதீஷ் (44), பொத்தனூரைச் சோ்ந்த ரமேஷ்பாபு (39) ஆகிய இருவரையும் பிடித்து பரமத்தி வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ. 65 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.