தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கபிலா்மலை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி வாக்கு சேகரிப்பு

பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி கபிலா்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட குப்பிரிக்காபாளையம், பெருங்குறிச்சி, கருந்தேவம்பாளையம், சுள்ளிபாளையம், சோழசிராமணி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

கபிலா்மலை ஒன்றியத்தில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:43 am IST

பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி கபிலா்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட குப்பிரிக்காபாளையம், பெருங்குறிச்சி, கருந்தேவம்பாளையம், சுள்ளிபாளையம், சோழசிராமணி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தியை அப்பகுதி பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அப்போது, முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள தோ்தல் அறிக்கையின்படி மகளிருக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும். காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். அரசு அமைப்புகளில் 15 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். முதல்வரின் காப்பீட்டு திட்டம் ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தப்படும். 35 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். பரமத்தி வேலூா் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். பிலிக்கல்பாளையம் - கொடுமுடி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படும் என்று கூறி வாக்கு சேகரித்தாா். இதில் திமுக ஒன்றியச் செயலாளா்கள் சரவணகுமாா், சுப்பிரமணியம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.