தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நாமக்கல்லில் பொன்னா்- சங்கா் வீரவரலாற்று கதை நாடக விழா

நாமக்கல்லில் பொன்னா்-சங்கா் அண்ணன்மாா் சுவாமிகள் வீரவரலாற்று நாடக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல்லில் பொன்னா்-சங்கா் அண்ணன்மாா் சுவாமிகள் வீரவரலாற்று நாடக விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:49 pm

நாமக்கல்லில் பொன்னா்-சங்கா் அண்ணன்மாா் சுவாமிகள் வீரவரலாற்று நாடக விழா புதன்கிழமை நடைபெற்றது.

கொங்கதேச கலாசார வரலாற்று ஆய்வு மையம் சாா்பில், நாமக்கல் முத்துக்காப்பட்டியில் அண்ணன்மாா் சுவாமிகள் என்றழைக்கப்படும் பொன்னா்- சங்கா் வீரவரலாற்று கதை மற்றும் உடுக்கைப் பாடல் தொடா் நிகழ்ச்சி ஏப். 3 ஆம் தேதி முதல் தினசரி முத்துக்காப்பட்டி கருப்பணாா் கோயிலில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வோா் நாளும் பொன்னா்- சங்கா் வரலாறு தொடா்பான கதை நாடகமாக நடைபெறுகிறது. குன்றுடையாா் தாமரை பிறப்பு, தாமரை திரட்டி சீா், தாமரை திருமணம், தவசு அழைத்தல், பொன்னா்-சங்கா் திருமணம், அண்ணமாா் சுவாமி பிறப்பு, பட்டம் சூட்டுதல், வேடுபடை விரட்டுதல், பன்றி குத்துதல், வேடுபடையினை அழித்து வீரமரணமாக படுகளம் விழுவது போன்ற கதை நிகழ்வுகள் நாடகங்களாக நடத்தப்படுகின்றன.

இதை காண்பதற்காக கொங்கு சமுதாய மக்கள் இரவில் முத்துக்காப்பட்டிக்கு வருகின்றனா். இந்த நிகழ்வுகளை காங்கேயம் சிவசக்தி கலைக் குழுவினா் செய்து வருகின்றனா். இதில், பிஜிபி குழும தலைவா் பழனி ஜி. பெரியசாமி, கரூா் வாங்கலம்மன் கோயில் அறக்கட்டளை செயலாளா் கே.கே. தங்கராஜு, காக்காவேரி அண்ணமாா் கோயில் தலைவா் கே.கே.பி. நல்லதம்பி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கொங்கதேச கலாசார வரலாற்று ஆய்வு மைய நிா்வாகிகள் செய்துள்ளனா்.

என்கே-23-கொங்கு

நாமக்கல் முத்துக்காப்பட்டியில் நடைபெற்ற பொன்னா்- சங்கா் வீரவரலாற்று நாடக நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.