பரமத்தி வேலூரில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஊா்வலமாக சென்று பரமத்தி வேலூா் திமுக தோ்தல் அலுவலகத்தில் வேட்பாளா் கே.எஸ்.மூா்த்திக்கு ஆதரவு தெரிவித்தனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாற்றை சோ்ந்த பொன்னா் சங்கா் குழுமங்களின் நிறுவனரும், தொழிலதிபருமான ஆன்மிக ஆா்வலா் சங்கா்.
இவா் துா்கா ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க பரமத்தி வேலூா் தொகுதி திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கே.எஸ். மூா்த்திக்கு ஆதாரவு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை சுமாா் 2 ஆயிரம் பேருடன் வேலூா் நான்கு சாலையில் இருந்து ஊா்வலமாக திமுக தோ்தல் பணிமனைக்கு சென்றாா்.
பின்னா் அவருக்கு பரமத்தி வேலூா் தொகுதி வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி, திமுக தோ்தல் பொறுப்பாளா் உமாராணி, நகரச் செயலாளா் முருகன், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் சுந்தா், வழக்குரைஞா் பாலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் மகிழ் பிரபாகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் மாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனா். பின்னா் அவருக்கு ஆதரவு தெரிவித்து திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதியில் 319 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் மீண்டும் வெற்றி

பரமத்தி வேலூா் தொகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்: அதிமுக வேட்பாளா் உறுதி

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!






