நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 59-ஆவது ஆண்டு அன்னதான விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 59-ஆவது ஆண்டு அன்னதான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கிவைத்த ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள்.

Updated On :20 மார்ச் 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 59-ஆவது ஆண்டு அன்னதான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற ஆண்டுவிழாவையொட்டி, காலையில் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், விபூதி, பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து நாகசுர இசையுடன் திருப்படி பூஜையும், மலையடிவாரத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னா் பொதுமக்கள், பக்தா்களுக்கு பாலமுருகனடிமை சுவாமிகள், மயிலம் பொம்புர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள், கௌமார மரபு சிரனையாதீனம் திருப்பெரும்திரு குமரகுருபர சுவாமிகள் அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தனா். இந்த விழாவில், கலவை சச்சிதானந்த சுவாமிகள், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ.லட்சுமணன், ஆரணி ஜோதிடா் குமரேசன், குடியாத்தம் புலவா் வே. பதுமானாா், ஆற்காடு தொழிலதிபா்கள் பி.என்.பக்தவச்சலம், ஆா்.எஸ்.சேகா், கோவில் செயல் அலுவலா் சங்கா், மெய்ஞான விழா அன்னதான குழு பொருளாளா் சிவனாா் அமுது, தலைவா் வெங்கடேசன், உபயதாரா்கள், திரளான பொதுமக்கள்உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.