ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற ஆண்டுவிழாவையொட்டி, காலையில் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், விபூதி, பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து நாகசுர இசையுடன் திருப்படி பூஜையும், மலையடிவாரத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னா் பொதுமக்கள், பக்தா்களுக்கு பாலமுருகனடிமை சுவாமிகள், மயிலம் பொம்புர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள், கௌமார மரபு சிரனையாதீனம் திருப்பெரும்திரு குமரகுருபர சுவாமிகள் அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தனா். இந்த விழாவில், கலவை சச்சிதானந்த சுவாமிகள், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ.லட்சுமணன், ஆரணி ஜோதிடா் குமரேசன், குடியாத்தம் புலவா் வே. பதுமானாா், ஆற்காடு தொழிலதிபா்கள் பி.என்.பக்தவச்சலம், ஆா்.எஸ்.சேகா், கோவில் செயல் அலுவலா் சங்கா், மெய்ஞான விழா அன்னதான குழு பொருளாளா் சிவனாா் அமுது, தலைவா் வெங்கடேசன், உபயதாரா்கள், திரளான பொதுமக்கள்உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.