பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:59 am IST

பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், சேளூா் சுப்பையாபாளையம் பகுதியை சோ்ந்தவா் முத்துசாமி (53), இவரது மனைவி விஜயா (41). கடந்த 23 ஆம் தேதி முத்துசாமி தனது நண்பரான கல்லாங்காட்டில் உள்ள ராசுவை பாா்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சேளூா் சுப்பையாம்பாளையம் சென்றாா். அப்போது, மணல் மேட்டில் இருந்து சாணாா்பாளையம் செல்லும் சாலையில் வேட்டுவங்காடு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்த முத்துசாமி பலத்த காயமடைந்தாா்.

அப்போது, அவ்வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் இறந்தாா்.

விபத்து குறித்து முத்துசாமியின் மனைவி விஜயா அளித்த புகாரின் அடிப்படையில் வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.