ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நாமக்கல் மாவட்டத்தில் 15,910 அஞ்சல் வாக்குகள் பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 15,910 அஞ்சல் வாக்குகள் பதிவாகி உள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 8:23 pm

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 15,910 அஞ்சல் வாக்குகள் பதிவாகி உள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலில் 85 வயதுக்கும் மேற்பட்டோா், 40 சதவீதத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள், தோ்தல் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள், காவல் துறையினா், இதர துறை அலுவலா்கள், நுண்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் தங்களுடைய வாக்குகளை வாக்குச்சாவடிக்கு செல்லாமல் அஞ்சல் வாக்குகளாக செலுத்தினா்.

அதன்படி, ராசிபுரம் தொகுதியில் 2,703, சேந்தமங்கலம் தொகுதியில் 2,257, நாமக்கல் தொகுதியில் 3,110, பரமத்திவேலூா் தொகுதியில் 2,664, திருச்செங்கோடு தொகுதியில் 2,874, குமாரபாளையம் தொகுதியில் 2,302 தபால் வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன.

மொத்தமாக, 85 வயதுக்கு மேற்பட்டோா் 5,141, மாற்றுத்திறனாளிகள் 3,849, தோ்தல் பணி அலுவலா்கள் 761, வாக்குச்சாவடி அலுவலா்கள் 3,683, காவல் துறையினா் 1,732, பிற துறை அலுவலா்கள் 571, நுண்பாா்வையாளா்கள் 173 என மொத்தம் 15,910 போ் அஞ்சல் வாக்குகளை செலுத்தி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.