ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது வெடி விபத்து ஏற்பட்டு காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூா் பழந்தின்னிப்பட்டியைச் சோ்ந்தவா் கண்ணன் (60). இவரது மனைவி செல்வி (50). இவா்களது 17 வயது மகன் கடந்த 25 ஆம் தேதி வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, துப்பாக்கி வெடித்து அதிலிருந்து வெளியேறிய பால்ரஸ் குண்டுகள் செல்வியின் தோள்பட்டை, கழுத்து பகுதியில் பாய்ந்தன.
பலத்த காயங்களுடன் ராசிபுரம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட செல்விக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
இந்தநிலையில் மருத்துவமனையில் செல்வி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வெண்ணந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தவறி விழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த தொழிலாளி கைது

பாம்புக் கடித்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே வீட்டில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பெண் காயம்: சிறுவன் கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

