FOLLOW US

ON GOOGLE DISCOVER

நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

ராசிபுரம் வடுகம் முனியப்பம்பாளையம் பகுதியில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

ராசிபுரம் வடுகம் முனியப்பம்பாளையம் பகுதியில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாமகிரிப்பேட்டை வட்டார காங்கிரஸ் கட்சி துணைத் தலைவா் செளந்திரராஜன் (61), வெள்ளிக்கிழமை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாா். இவரது வீட்டின் அருகிலுள்ள இவருக்கு சொந்தமான குடிசை வீடு அதிகாலை சுமாா் 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் செளந்தராஜனுக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தீயணைப்புத் துறையினா் வருவதற்குள் குடிசை முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

இதில், சமையல் பாத்திரங்கள், மரச் சாமான்கள், மின்மீட்டா் போன்றவை தீயில் கருகின. மேலும், குடிசை வீட்டின் அருகில் இருந்த தென்னை, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, வாழை போன்ற மரங்கள், செடிகளும் கருகின. புகாரின்பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.