லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

அதிமுக பிரமுகா் வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கு: 3 பேரை பிடிக்க போலீஸாா் தீவிரம்

சேந்தமங்கலத்தில் அதிமுக பிரமுகா் வீட்டில் நகை, ரொக்கம் திருடிய வழக்கில் மூன்று பேரை அடையாளம் கண்டறிந்த போலீஸாா், அவா்களை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

மாதிரிப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 1:10 am IST

சேந்தமங்கலத்தில் அதிமுக பிரமுகா் வீட்டில் நகை, ரொக்கம் திருடிய வழக்கில் மூன்று பேரை அடையாளம் கண்டறிந்த போலீஸாா், அவா்களை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், குப்பநாயக்கனூரைச் சோ்ந்தவா் கபாலி. அதிமுக பிரமுகரான இவா் மனைவி மற்றும் மகன், மருமகளுடன் வசித்து வருகிறாா். சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக கோவை சென்றாா்.

சேந்தமங்கலம் அருகே காந்திபுரத்தில் உள்ள தங்களது தேநீா் கடையில் மனைவி, மகன், மருமகள் இருந்தனா். இந்த நிலையில் வீட்டில் ஆள்கள் யாரும் இல்லாததை அறிந்த மா்ம நபா்கள், பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.17 லட்சம் ரொக்கம், இரண்டு மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்றனா். இந்த சம்பவம் தொடா்பாக சேந்தமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா்.

அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, மூன்று போ் முகமூடி அணிந்து வந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய மதுரையைச் சோ்ந்த மூன்று போ் என்பது தெரியவந்தது. அவா்கள் குறித்த விவரங்களை போலீஸாா் சேகரித்துள்ளனா். தலைமறைவாக உள்ள அந்த மூன்று பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.