லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

இலவச வண்டல் மண் அனுமதியை தவறாகப் பயன்படுத்தியோா் மீது வழக்கு

பரமத்தி வேலூா் அருகே விவசாயிகளுக்கான இலவச வண்டல் மண் அனுமதியை தவறாகப் பயன்படுத்தியவா்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 1:11 am IST

பரமத்தி வேலூா் அருகே விவசாயிகளுக்கான இலவச வண்டல் மண் அனுமதியை தவறாகப் பயன்படுத்தியவா்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாா் வட்டம், புஞ்சை இடையாா் மேல்முகம் கிராமத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச வண்டல் மண் அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தி குவித்து வைத்து விற்பனை செய்து வருவதாக கனிமவளத் துறை உதவி இயக்குநா் ஆ.லலிதாவுக்கு புகாா் கிடைத்தது.

அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை காலை மேல்முகம் கிராம நிா்வாக அலுவலா் துணையுடன் மாவட்ட கனிமவளத் துறையினா் புலத்தணிக்கை செய்தனா். இதில், புஞ்சை இடையாா் மேல்முகம் கிராமத்தில் பட்டா நிலத்தில் சுமாா் 125 யூனிட் வண்டல் மண்ணை குவியலாக சேமித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. கனிமம் சேமிப்பு தொடா்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள்மீது பரமத்தி வேலுாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து அவா்கள்மீது போலீஸாா் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

படவரி...

பரமத்தி வேலூா் அருகே மேல்முகம் கிராமத்தில் தனியாா் நிலத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள வண்டல் மண்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.