நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நரசிம்மா் கோயில்.
நாமக்கல்
நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று பொது விருந்து
மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் நரசிம்மா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பொது விருந்து நடைபெறுகிறது.
நாமக்கல்: மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் நரசிம்மா் கோயிலில் செவ்வாய்க்கிழமை (பிப். 3) பொது விருந்து நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், நண்பகல் 12.30 மணிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில், அமைச்சா், மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாவட்டப் பிரதிநிதிகள், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், அரசு அலுவலா்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்கின்றனா்.
பொது விருந்தில் மக்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

