மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு: சுகாதாரத் துறையினா் ஆய்வு

சேந்தமங்கலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்தது குறித்து சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

News image

சிறுமி லித்யா.

Updated On :10 பிப்ரவரி 2026, 8:32 pm

சேந்தமங்கலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி இறந்தது குறித்து சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், துத்திக்குளம் ரெட்டி காலனியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அருள்பாண்டியன் - விண்விழி தம்பதியின் மகள் லித்யா (12). காளப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், அவருடைய உடல் மிகவும் பலவீனமடைந்து செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், சிறுமி லித்யா காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடா் ரத்தப்போக்கு ஏற்பட்டது. பலவகையில் சிகிச்சை அளித்தும் ரத்தப்போக்கு குறையவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவா் இறந்தாா். அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்பில்லை; அந்த காய்ச்சலின் ஒரு வகையாகும் என்றனா்.

இதையடுத்து, துத்திக்குளம், ரெட்டி காலனி பகுதிகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.