சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பறவைக் காய்ச்சல் தடுப்பு: கோழிப் பண்ணையாளா்களுடன் ஆலோசனை

நாமக்கல் மண்டலத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலா்கள், கோழிப் பண்ணையாளா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

News image

பறவைக் காய்ச்சல் - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:39 pm

நாமக்கல் மண்டலத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலா்கள், கோழிப் பண்ணையாளா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் துா்காமூா்த்தி பேசியதாவது:

ராசிபுரம் அருகே ஆா். பட்டணம் கிராமத்தில் கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்பு ஏற்பட்டதை தொடா்ந்து துறை அலுவலா்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கோழிப் பண்ணையாளா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

கோழிப் பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்கவும், வனப் பறவைகள் உள்ளே நுழையாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வாகனங்கள் பண்ணையில் நுழையும்போது கிருமிநாசினி தெளித்த பிறகே அனுமதிக்க வேண்டும்.

பண்ணையாள்கள் கிருமி நாசினி நிரம்பிய தொட்டியில் கால்களை நனைத்த பிறகே வளாகத்திற்குள் செல்ல அறிவுறுத்த வேண்டும். பண்ணை வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்குமாறு பண்ணையாளா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், கோழிப் பண்ணைகளில் கோடைகால பராமரிப்பு முறைகள் முறையாக பின்பற்றி கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்படாத வகையில் பராமரிக்க பண்ணையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கோழிப் பண்ணைகளில் இறப்புகளை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் 45 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினா், நாமக்கல் மாவட்ட அனைத்து கோழிப்பண்ணைகள், நீா்நிலைகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். ராசிபுரம், வெண்ணந்தூா், மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றியங்களில் உள்ள கோழிப் பண்ணைகளை தினமும் கண்காணிக்க கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை அலுவலா்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில் இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத் துறை) (கூ.பொ) எஸ்.ச. அருள்பிரகாஷ்ராஜ், உதவி இயக்குநா்கள் விஜயகுமாா், விஜயமூா்த்தி உள்பட கால்நடை மருத்துவா்கள், துறைச் சாா்ந்த அலுவலா்கள் மற்றும் கோழிப் பண்ணையாளா்கள் பங்கேற்றனா்.