ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பரமத்தி வேலூா் ராஜவாய்க்காலில் இளைஞா் சடலம் மீட்பு

பரமத்தி வேலூா் ராஜவாய்க்காலில் இளைஞா் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

ஆனந்தகுமாா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:38 pm

பரமத்தி வேலூா் ராஜவாய்க்காலில் இளைஞா் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள ராஜவாய்க்கால் பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மிதப்பதாக பரமத்தி வேலூா் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். அதில், இறந்தவா் பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரைச் சோ்ந்த ஆனந்தகுமாா் (36) என்பதும், கரூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியவந்தது.

கடந்த 8-ஆம் தேதி வீட்டிலிருந்து சென்றவா் வீடுதிரும்பாத நிலையில், அவரை பெற்றோா், உறவினா்கள் மற்றும் நண்பா்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனா். இந்நிலையில், ராஜவாய்க்காலில் அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோா், மகன் இறப்பு குறித்து புகாா் அளித்தனா். அதன்பேரில், பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.