வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

News image

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய நிா்வாகிகள்.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:30 pm

நாமக்கல்லில், மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்கம், பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம், அலையன்ஸ் கிளப் ஆப் நாமக்கல் மற்றும் தனியாா் அறக்கட்டளை நிறுவனங்கள் சாா்பில் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். 5-7 வயதுக்குள் மரம், 8-10 வயதுக்குள் குப்பையில்லா நகரம், 11-13 வயதுக்குள் தண்ணீா் சேமிப்பு, 14-16 வயதுக்குள் சாலைப் பாதுகாப்பு, 17-19 வயதுக்குள் நெகிழியில்லா உலகம், 20, 21 வயதுடையோா் நமது கலாசாரம், நமது அடையாளம் என்ற தலைப்பின்கீழ் ஓவியங்களை வரைந்தனா்.

இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம், மரக்கன்றுகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் பங்கேற்று மாணவா்களை வாழ்த்தி பேசினாா். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.