சிறு வணிகக் கடன் பயன்பாட்டுக்கு உதவும் மகளிா் அட்டை: ராஜேஸ்குமாா் எம்.பி
நாமக்கல்: தமிழக அரசால் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை கொண்டு சிறு வணிகக் கடன் பெற்று பயனடையலாம் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல் மாநகரப் பகுதிகளுக்கு உள்பட்ட மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு வரவேற்றாா். நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று 50க்கும் மேற்பட்ட மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது:
கடந்த 1989ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மகளிா் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டதே மகளிா் சுயஉதவிக் குழுக்கள். பல்வேறு வங்கிகள் மூலம் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய திமுக ஆட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் பயனடையும் வகையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் சிறு வணிகக் கடன், தொழில் முதலீட்டு கடன், மாற்றுத்திறனாளி கடன் உள்ளிட்டவற்றை பெறமுடியும். மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை பேருந்தில் எடுத்துச் செல்வதற்கு சலுகை கட்டணம் உண்டு.
திமுக ஆட்சியில் மக்கள் நலனுக்கான திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ. 5 ஆயிரம் உரிமைத்தொகை கடந்த வாரம் மகளிா் வங்கிக் கணக்கில் சோ்க்கப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும், மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,000 ஆக உயா்த்தி வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எதிரான திட்டங்களே கொண்டுவரப்பட்டன. திமுக ஆட்சியில் மாணவா்கள், மகளிா், முதியோா் என ஒவ்வொருவரின் நலன்கருதியும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.
இந்த நிகழ்வில், மாமன்ற உறுப்பினா்கள், மகளிா் திட்ட அதிகாரிகள், சுயஉதவிக் குழுவினா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

