இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

விசைத்தறி தொழிலாளி தற்கொலை: போலீஸ் விசாரணை!

விசைத்தறித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை

Updated On :26 பிப்ரவரி 2026, 8:10 pm

திருச்செங்கோடு அருகே விசைத்தறித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்செங்கோட்டை அடுத்த ராஜாகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த தண்டாயுதபாணி மகன் வெங்கடாசலம் (45), விசைத்தறித் தொழிலாளி. இவா் கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். பின்னா், அவராகவே 108 ஆம்புலன்ஸுக்கு தொடா்பு கொண்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சோ்ந்தாா்.

பிறகு மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.