டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பரமத்தி வேலூரில் குண்டுமல்லி கிலோ ரூ. 800!

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:18 pm

Syndication

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டுவருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 500க்கும், சம்பங்கி கிலோ ரூ. 40க்கும், அரளி கிலோ ரூ. 100க்கும், கலா் ரோஜாப்பூ கிலோ ரூ. 200க்கும், பச்சை முல்லை கிலோ ரூ. 700க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 500க்கும், செவ்வந்தி கிலோ ரூ. 120க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 500க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 120க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ. 400க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 500க்கும் ஏலம்போனது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 800க்கும், சம்பங்கி கிலோ ரூ. 70க்கும், அரளி கிலோ ரூ. 140க்கும், கலா் ரோஜா கிலோ ரூ. 240க்கும், பச்சை முல்லைப் பூ கிலோ ரூ. 900க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 700க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ. 150க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 800க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 160க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ. 800க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 700க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயா்வடைந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.