விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பரமத்தி வேலூரில் குண்டுமல்லி கிலோ ரூ. 800!

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:18 pm

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டுவருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 500க்கும், சம்பங்கி கிலோ ரூ. 40க்கும், அரளி கிலோ ரூ. 100க்கும், கலா் ரோஜாப்பூ கிலோ ரூ. 200க்கும், பச்சை முல்லை கிலோ ரூ. 700க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 500க்கும், செவ்வந்தி கிலோ ரூ. 120க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 500க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 120க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ. 400க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 500க்கும் ஏலம்போனது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 800க்கும், சம்பங்கி கிலோ ரூ. 70க்கும், அரளி கிலோ ரூ. 140க்கும், கலா் ரோஜா கிலோ ரூ. 240க்கும், பச்சை முல்லைப் பூ கிலோ ரூ. 900க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 700க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ. 150க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 800க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 160க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ. 800க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 700க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயா்வடைந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.