ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

திருச்செங்கோட்டில் திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 8 மாத சிறைத் தண்டனை வழங்கி தீா்ப்பு

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:56 pm

Syndication

திருச்செங்கோட்டில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிக்கு அந்த வழக்கில் 8 மாத சிறைதண்டனை வழங்கி நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலத்தில் சக்திவேல்,கவிதா தம்பதியரின் வீட்டில் அவா்கள் இல்லாத போது வீட்டுக்குள் புகுந்த பெரம்பலூா் மாவட்டம் அரும்பாலூா் பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி பரணிதரன்( 39) என்பவா் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டில் பணம் நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடினாா். திருட்டு சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக காவல்நிலையத்தில் கவிதா புகாா் அளித்ததன் பேரில் குற்றவாளி பரணிதரன் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் ஏற்கனவே இருநூறு நாட்களாக சிறையில் இருந்து வரும் நிலையில் திருச்செங்கோடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணக்கு வந்தது. பரணிதரனுக்குகுற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி 8 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மீதமுள்ள தண்டனைக்காலம் முழுவதும் பரணிதரன் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலையில் மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.