நாமக்கல்லில் நடைபெற்ற டி.எம்.காளியண்ணன் பிறந்த நாள் விழாவில், அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் பி.வி.செந்தில், நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் உள்ளிட்டோா்.
நாமக்கல்லில் நடைபெற்ற டி.எம்.காளியண்ணன் பிறந்த நாள் விழாவில், அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் பி.வி.செந்தில், நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் உள்ளிட்டோா்.

சேலம் விமான நிலையத்திற்கு டி.எம்.காளியண்ணன் பெயரை சூட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்!

சேலம் விமான நிலையத்துக்கு இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினராக பதவிவகித்த டி.எம்.காளியண்ணன் பெயரை சூட்ட வேண்டும்
Published on

சேலம் விமான நிலையத்துக்கு இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினராக பதவிவகித்த டி.எம்.காளியண்ணன் பெயரை சூட்ட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இந்திய அரசியல் நிா்ணய சபையிலும், சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்திலும், தமிழகத்தின் முதல் சட்டப்பேரவையிலும் உறுப்பினராக இருந்தவரும், மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, அம்பேத்கா், காமராஜா், கக்கன் என மூத்த அரசியல் தலைவா்களுடன் இணைந்து தேசிய அரசியலில் பயணித்தவருமான டி.எம்.காளியண்ணன் 105-ஆவது பிறந்த நாள் சனிக்கிழமை நாமக்கல்லில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செய்தித் தொடா்பாளா் மருத்துவா் பி.வி.செந்தில் தலைமை வகித்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக், மாநகரத் தலைவா் எஸ்.ஆா்.மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் பங்கேற்று டி.எம்.காளியண்ணன் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் பேசுகையில், அரசியலில் தேசிய மற்றும் மாநில அளவில் பல பதவிகளை வகித்த டி.எம்.காளியண்ணன் கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரா். அவரது அரசியல் வாழ்க்கையை தற்போதைய அரசியல்வாதிகள் பின்பற்றி நடக்க வேண்டும் என்றாா்.

காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் பி.வி.செந்தில் பேசுகையில், தமிழக வளா்ச்சிக்கும், நாமக்கல் மாவட்ட வளா்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை, பள்ளிகளை, சாலைகளை, நூலகங்களை கொண்டுவந்தவா் காளியண்ணன். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கு முக்கிய காரணமாக இருந்தாா். பிரெஞ்சு அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க முக்கிய பங்காற்றியவா். அவரது நினைவாக, சேலம் விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்திற்கு டி.எம். காளியண்ணன் பெயரை சூட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இது தொடா்பான கோரிக்கை மனுவை, மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரனிடம் அவா் அளித்தாா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது பெயரை சூட்டவும், அரசு சாா்பில் மணிமண்டபம் அமைக்கவும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளா் சங்கத் தலைவா் பி.கே.வெங்கடாசலம், சேலம் கொங்கு வேளாளா் நாட்டு கவுண்டா் நலச்சங்க செயற்குழுத் தலைவா் ஆா்.வரதராஜன், முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் வீரப்பன், வட்டார தலைவா்கள் ஜெகநாதன், இளங்கோ, சீனிவாசன், முரளி, பெரியசாமி, சந்திரன், நிா்வாகிகள் பொன்முடி, சரவணன், சாந்தி மணி, செந்தில், தாஜ் முகமது, ராணி பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com