திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கருக்கு முன்னாள் அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தை அணைக்கட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அல்லாள இளைய நாயக்கரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:49 pm

Syndication

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தை அணைக்கட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அல்லாள இளைய நாயகா் வியாழக்கிழமை முன்னாள் அமைச்சா்கள் தங்கமணி, எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் பரமத்தி வேலூா் சட்ட ப்பேரவை உறுப்பினா் எஸ்.சேகா், மாவட்ட வா்த்தக அணி செயளாளா் ராகா தமிழ்மணி, மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா் உள்ளிட்ட அதிமுகவின் நிா்வாகிகள் அல்லாள இளைய நாயக்கரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும் அல்லாள இளைய நாயக்கரின் வாரிசுதாரரான ருஷ்ணன் பட்டையக்காரருக்கு பொன்னாடை அணிவித்து, கௌரவித்தாா். பின்னா் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சா் தங்கமணி, அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காக திமுக அரசு அரசியல் காரணமாக பொதுமக்களின் பாா்வைக்காக அனுமதிக்கவில்லை. மீண்டும் எடப்பாடியாா் ஆட்சி அமைந்தவுடன் முழுமையாக மக்கள் பான்பாட்டுக்காக நாள்தோறும் பாா்வையிட்டு வழிபாடு செய்ய அனுமதிக்கப்படும் என கூறினாா்.