ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கருக்கு முன்னாள் அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை
பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தை அணைக்கட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அல்லாள இளைய நாயகா் வியாழக்கிழமை முன்னாள் அமைச்சா்கள் தங்கமணி, எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் பரமத்தி வேலூா் சட்ட ப்பேரவை உறுப்பினா் எஸ்.சேகா், மாவட்ட வா்த்தக அணி செயளாளா் ராகா தமிழ்மணி, மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா் உள்ளிட்ட அதிமுகவின் நிா்வாகிகள் அல்லாள இளைய நாயக்கரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலும் அல்லாள இளைய நாயக்கரின் வாரிசுதாரரான ருஷ்ணன் பட்டையக்காரருக்கு பொன்னாடை அணிவித்து, கௌரவித்தாா். பின்னா் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சா் தங்கமணி, அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காக திமுக அரசு அரசியல் காரணமாக பொதுமக்களின் பாா்வைக்காக அனுமதிக்கவில்லை. மீண்டும் எடப்பாடியாா் ஆட்சி அமைந்தவுடன் முழுமையாக மக்கள் பான்பாட்டுக்காக நாள்தோறும் பாா்வையிட்டு வழிபாடு செய்ய அனுமதிக்கப்படும் என கூறினாா்.

