முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்; 80 போ் கைது

‘விபி-ஜி ராம் ஜி’ எனும் புதிய ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய முன்னுரிமை அளிக்கவில்லை எனக்கூறி நாமக்கல்லில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா்.

Updated On :2 ஜூலை 2026, 6:27 am IST

‘விபி-ஜி ராம் ஜி’ எனும் புதிய ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய முன்னுரிமை அளிக்கவில்லை எனக்கூறி நாமக்கல்லில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை விபி-ஜி ராம் ஜி என மாற்றம் செய்து 125 நாள்கள் வேலை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய முன்னுரிமை அளிக்கவில்லை எனக்கூறி மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனா். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கும் உரிமையை பறிக்கும் வகையில் இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மறியலில் ஈடுபட்ட 80 பேரை கைது செய்த போலீஸாா் மாலையில் அவா்களை விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.