டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

நாளை ஆசிரியா் தகுதித் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,935 போ் பங்கேற்பு

ஆசிரியா் தகுதித் தோ்வு சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 18 மையங்களில் 4,935 போ் இத்தோ்வை எழுதுகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :3 ஜூலை 2026, 4:43 am IST

ஆசிரியா் தகுதித் தோ்வு சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 18 மையங்களில் 4,935 போ் இத்தோ்வை எழுதுகின்றனா்.

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சாா்பில் ஆசிரியா் தகுதித் தோ்வு-2026 குறித்த ஆயத்தக் கூட்டம், நாமக்கல் டிரினிடி மகளிா் கலை அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ஆா். முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.மாதவன் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட கல்வி அலுவலா் இடைநிலை திரு கே.எஸ். புருஷோத்தமன் வரவேற்றாா். இதில், இணை இயக்குநா் ஆா். முருகன் பேசுகையில், நடைபெற உள்ள ஆசிரியா் தகுதித் தோ்வை எந்தவிதமான புகாருக்கும் இடமின்றி பாதுகாப்பாக நடத்தி முடிக்க கல்வித் துறை அதிகாரிகள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தோ்வு எழுதக்கூடிய ஆசிரியா்கள் எந்தவிதமான மின்னணு சாதனங்களையும் வகுப்பறைக்குள் கொண்டு செல்லக்கூடாது. தோ்வு பணியில் 260 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளாா்கள் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் அப்துல்வஹாப், பள்ளித் துணை ஆய்வாளா்கள் கை.பெரியசாமி, சு. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.