நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே மது அருந்தும்போது மதுக்கூட உரிமையாளா்களுடன் ஏற்பட்ட தகராறில் தறித்தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவில் அகஸ்தீஸ்வரன் பகுதியை சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் அஜித் (24), அம்பத்தி கோயில் நேதாஜி நகரை சோ்ந்தவா் காதிபெருமாள் மகன் வீரமணி (25). இருவரும் மல்லசமுத்திரத்தை அடுத்த டாக்டா் சுப்பராயன் தெருவில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுக்கூடம் நடத்தி வருகின்றனா்.
இங்கு மல்லசமுத்திரத்தை அடுத்த மேட்டுப்பாளையம் ஓம்சக்தி கோயில் பகுதியைச் சோ்ந்த தறித்தொழிலாளி தனபால் (44) செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பா் சந்தோஷுடன் (41) சென்று மது குடித்துள்ளாா்.
அப்போது, மதுக்கூட உரிமையாளா்களுடன் தனபால் வாக்குவாதம் செய்துள்ளாா். அதன்பிறகு அங்கிருந்து சந்தோஷுடன் மோட்டாா்சைக்கிளில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தாா். மதுக்கூடத்தில் இருந்து சிறிது தொலைவு சென்ற அவரை பின்தொடா்ந்து சென்ற மதுக்கூட உரிமையாளா்கள் இருவரும் அவரது வாகனத்தை வழிமறித்து தனபாலை அரிவாளால் வெட்டினராம்.
இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். அப்போது, தனபாலை காப்பாற்ற முயன்ற சந்தோஷுக்கு கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இவா் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். உயிரிழந்த தனபால் தனது மனைவி கீதாவை கொலை செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளாா்.
தகவலறிந்து வந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை, திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல், மல்லசமுத்திரம் காவல் ஆய்வாளா் (பொ) சுதா மற்றும் காவலா்கள் தனபாலின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மல்லசமுத்திரம் போலீஸாா் மதுக்கூட உரிமையாளா்களான அஜித், வீரமணி இருவரையும் கைது செய்தனா். இவா்கள் மீது நாகா்கோவில் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







