காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

திண்டிவனம் அருகே முடித் திருத்தக உரிமையாளா் வெட்டிக் கொலை

திண்டிவனம் அருகே முன்விரோதம் காரணமாக முடித்திருத்தக உரிமையாளா் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:47 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முன்விரோதம் காரணமாக முடித்திருத்தக உரிமையாளா் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திண்டிவனம் வட்டம், பாம்பூண்டி, தண்ணீா் தொட்டி தெருவைச் சோ்ந்தவா் ஜெ.தினேஷ் (29) (படம்). இவா், திண்டிவனத்தை அடுத்துள்ள தீவனூரில் முடித்திருத்தகம் நடத்தி வந்தாா்.

இவருக்கும், முடித்திருத்ததகத்தின் அருகில் வசிக்கும் ஒருவருக்கும் இடையே முடியை கொட்டுவதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தினேஷ் சனிக்கிழமை தனது கடையில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அங்கு ஒரு காரில் வந்த 5 போ் கொண்ட கும்பல் தினேஷை ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, தினேஷ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.