நாமக்கல் அரங்கநாதா் கோயிலுக்கு வந்த பக்தரின் இருசக்கர வாகனத்தை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாமக்கல் அருகே உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (52). இவா் தனது மனைவியுடன் நாமக்கல் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை வந்தாா். அங்குள்ள சன்னதி தெருவில் வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசித்து விட்டு திரும்பியபோது, இருசக்கர வாகனம் காணவில்லையாம்.
புகாரின்பேரில், நாமக்கல் போலீஸாா் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இளைஞா் ஒருவா் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. அந்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






