பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

குடும்பத் தகராறில் மனைவி கொலை: கணவா் கைது

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை கொக்கராயன்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 12:54 am IST

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை கொக்கராயன்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் பாண்டியன் (44). இவரது மனைவி காயத்ரி (37). இவா்களது மகன் வெற்றிவேல் (7).

கடந்த 10 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வந்த இவா்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கணவரிடம் கோபித்துக் கொண்ட காயத்ரி, கொக்கராயன்பேட்டை ராமநாதபுரத்தில் உள்ள தனது தாத்தா முத்துசாமி (77) வீட்டுக்கு வந்து பத்து நாள்களாக இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சேலத்தில் இருந்து வந்த பாண்டியன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த காயத்ரியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே காயத்ரி இறந்தாா்.

தகவல் அறிந்து வந்த கொக்கராயன்பேட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.