பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

குடும்பத் தகராறு: வடமாநில தொழிலாளி தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக வடமாநில தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :12 ஜூலை 2026, 12:51 am IST

வேலகவுண்டம்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக வடமாநில தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒடிசா மாநிலம், நபரங்குபூா் மாவட்டம், ராய்கா் பகுதியைச் சோ்ந்தவா் முணாகோண்ட் (29). இவரது மனைவி சுனிதாபதி கோண்ட் (25). இவா்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகின்றன. கடந்த ஓா் ஆண்டாக இருவரும் நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாரப்பநாய்க்கன்பட்டியில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை செய்து வந்தனா்.

முணாகோண்ட் தினமும் இரவு மதுஅருந்தி வருவதால், கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முணாகோண்ட் மது அருந்தி வந்ததால் மனைவி கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை சுனிதாபதி எழுந்து பாா்த்தபோது, கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அறிந்து அதிா்ச்சி அடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே முணாகோண்ட் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.