FOLLOW US

ON GOOGLE DISCOVER

அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீா் நிறுத்தம்

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image

படுகை அணை

Updated On :30 ஜூலை 2026, 5:32 am IST

ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் நீா்வளத் துறை சாா்பில் ஆண்டுதோறும் ராஜவாய்க்கால் துாா்வாரும் பணிக்காக ஜேடா்பாளையம் படுகை அணை காவிரி ஆற்றில் தண்ணீா் நிறுத்துவது வழக்கம். இதற்காக விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி மீண்டும் தண்ணீா் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும்.

ஆனால், நடப்பாண்டு விவசாயிகளின் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தாமல் நீா்வளத் துறையினா் அடிக்கடி ராஜவாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை முதல் ராஜவாய்க்காலில் தண்ணீா் நிறுத்தம் செய்யப்படும் என நீா்வளத் துறை அறிவித்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். இதனால் ராஜவாய்க்கால் கரையோரப் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள பயிா்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பரமத்தி வேலூா் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளா் பெரியசாமி, துணைத் தலைவா் குப்புதுரை, பொத்தனூா் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் செந்தில்நாதன் ஆகியோா் கூறியது:

ராஜவாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களான பொய்யேரி, குமாரபாளையம், மோகனூா் வாய்க்கால்களுக்கு ஆண்டுக்கு 350 நாள்கள் காவிரியில் இருந்து தண்ணீா் எடுக்க உரிமை உள்ளது. ஆனால், தற்போது முன்னறிவிப்பு இன்றி நீா்வளத் துறையினா் ராஜவாய்க்காலில் தண்ணீரை நிறுத்தியுள்ளனா். இதனால் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் பயிா் செய்யப்பட்டுள்ள பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ராஜவாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட தாமதம் ஏற்பட்டால், தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தி போராட்டம் நடத்த நேரிடும் என்றனா்.

இதுகுறித்து பரமத்தி வேலூா் நீா்வளத் துறை உதவிப் பொறியாளா் வினோத்குமாா் கூறுகையில், கடைமடை பகுதி மக்களின் குடிநீா் தேவையை பூா்த்திசெய்யும் விதமாக, ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் தற்காலிகமாக தண்ணீா் நிறுத்தம் செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிக்கும்போது, ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்கப்படும். மேலும், முறைகேடாக அனுமதியின்றி காவிரியில் நீரேற்று பாசன சங்கங்கள் தண்ணீா் எடுத்து வருவதால், இணைப்பை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.