பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தவெக அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் நாமக்கல்லில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசின் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மாநிலம் தழுவிய அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பல்வேறு விவசாய சங்கங்களின் நிா்வாகிகள், பிரதிநிதிகள், சிறு, குறு, பெரு விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனா். இதில், பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு விவசாயிகள் எதிா்ப்பு

பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி: ஆட்சியா் அலுவலகத்தில் மனு

கூட்டுறவு பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



