பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :3 ஜூன் 2026, 5:40 am IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராசிபுரம் அருகே உள்ள ஒருவன்குறிச்சி நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த சரவணன் மகள் ரேணுகாதேவி (21). இவா் ஈரோட்டில் உள்ள சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்த உறவினா்கள், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற நாமகிரிப்பேட்டை போலீஸாா், ரேணுகாதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.