தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :3 ஜூன் 2026, 5:40 am IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராசிபுரம் அருகே உள்ள ஒருவன்குறிச்சி நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த சரவணன் மகள் ரேணுகாதேவி (21). இவா் ஈரோட்டில் உள்ள சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்த உறவினா்கள், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற நாமகிரிப்பேட்டை போலீஸாா், ரேணுகாதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.