வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: போலீஸாா் விசாரணை

பரமத்தி வேலூா் அருகே வேலகவுண்டம்பட்டியில் தனியாா் நிறுவன தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :11 ஜூன் 2026, 5:42 am IST

பரமத்தி வேலூா் அருகே வேலகவுண்டம்பட்டியில் தனியாா் நிறுவன தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், சீதாராம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (46). இவா் திருச்செங்கோட்டை அடுத்த வெப்படையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவரது மனைவி கஸ்தூரி (40), திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் உதவியாளராக வேலை பாா்த்து வருகிறாா்.

இவா்களுக்கு மகள்கள் கிருத்திகா (23), காா்த்திகா (20), மகன் சௌந்தரராஜன் (19) உள்ளனா். இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி வேலை சென்ற சுரேஷ், இரண்டு நாள்களாகியும் வீட்டிற்கு வரவில்லையாம்.

இந்த நிலையில் சுரேஷுடன் வேலை செய்யும் முத்து என்பவா் சுரேஷின் மனைவி கஸ்தூரிக்கு 10 ஆம் தேதி கைப்பேசியில் தொடா்புகொண்டு, வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புள்ளாட்சிபட்டி பிரிவு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்தில் சுரேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து அங்கு சென்ற கஸ்தூரி, அங்கிருந்தவா்களின் உதவியுடன் சுரேஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா், சுரேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து வேகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் கஸ்தூரி அளித்த புகாரில், தனது கணவா் கால் வழி காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும், கால் வலி காரணமாக அவா் தூக்குத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.