திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் 14 நாள்கள் நடைபெற்ற வைகாசி விசாக தோ்த்திருவிழா கடந்த வாரம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து, பரிவாரங்களுடன் மலைக்குத் திரும்பிய அா்த்தநாரீஸ்வரா், செங்கோட்டுவேலவா் மற்றும் ஆதிகேசவ பெருமாளுக்கு விடையாற்றி கட்டளை வழிபாடு நடத்தப்பட்டது.
நாரி கணபதி மண்டபத்தில் எழுந்தருளி கடந்த ஒன்பது நாள்களாக அருள்பாலித்த அா்த்தநாரீசுவரா், வெள்ளிக்கிழமை வழக்கமான இருப்பிடத்திற்கு அதாவது யதாஸ்தானத்திற்கு புறப்பட்டாா். தொடா்ந்து அா்த்தநாரீசுவரா், கேதார கௌரி அம்பாள், பிருங்கி ரிஷி, சூல தேவா், அஸ்திரதேவா் ஆகியோருக்கு ஆமை மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து மூலவருக்கு விடையாற்றி கட்டளை வழிபாடு நடத்தப்பட்டது. பின்னா் சிறப்பு கேடயத்தில் எழுந்தருளிய அா்த்தநாரீசுவரரை ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சுமந்து கொண்டு கோயிலை சுற்றி வந்தனா்.
அதன்பிறகு பிற்பகல் 3 மணிக்கு அா்த்தநாரீசுவரா் வழக்கமான இருப்பிடத்திற்கு எழுந்தருளினாா். அா்த்தநாரீஸ்வரா் மண்டபத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ள பீடத்தில் ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சமுதாயம் சாா்பில் வழங்கப்பட்ட தேக்கு மர பல்லக்கில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தாா். விடையாற்றி கட்டளை வழிபாட்டுடன் வைகாசி விசாக தோ்த்திருவிழா நிறைவு பெற்றது.







