கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

News image

கிணற்றில் விழுந்த பசுமாட்டை கயிறுகட்டி மீட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :16 ஜூன் 2026, 2:41 am IST

ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி பகுதியில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.

ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி, திருப்பதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் துரைசாமி (68). இவா் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றபோது, அருகிலிருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் மாடு தவறி விழுந்தது.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் மற்றும் உள்ளூா் இளைஞா்கள் இணைந்து கயிறுகட்டி கிணற்றிலிருந்து பசுமாட்டை உயிருடன் மீட்டனா்.

நாய் மீட்பு...

அதேபோல ராசிபுரம் அருகே கைலாசம்பாளையத்தில் 40 ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த வளா்ப்பு நாயை ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா்.