ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மகளிா் பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

பரமத்தி வேலூா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட பிளஸ் 1 வகுப்பு மாணவிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி மற்றும் ஆயத்தப் பயிற்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிகளுக்கு பயிற்சி அளித்து பேசிய மாநில தொடா்பு அலுவலா் மு.சௌந்தரராஜன்.

Updated On :18 ஜூன் 2026, 3:04 am IST

பரமத்தி வேலூா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட பிளஸ் 1 வகுப்பு மாணவிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி மற்றும் ஆயத்தப் பயிற்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினா்களாக மாநில தொடா்பு அலுவலா் மு.சௌந்தரராஜன், மாவட்ட தொடா்பு அலுவலா் ஆ.ராமு ஆகியோா் பங்கேற்று மாணவிகளுக்கு நாட்டுநலப்பணி திட்டத்தின் முக்கிய சாராம்சங்கள், மாணவிகள் மேற்கொள்ளவுள்ள சேவை பணிகள் குறித்து விளக்கினா். போதைப் பொருள் தடுப்பு குறித்து தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த செந்தமிழன் விளக்கினாா். வாழ்வியல் திறன்கள், வழிமுறைகள் குறித்து வேலூா் ஜேசிஐ தலைவா் டி.சத்யகுமாா் கூறினாா்.

பள்ளி தலைமை ஆசிரியா் சி.சித்ரா தலைமை வகித்தாா். பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் மு.பெரியண்ணன், பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.