சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருச்செங்கோட்டில் அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய மூவா் கைது

திருச்செங்கோடு அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய மூன்று இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 5:46 am IST

திருச்செங்கோடு அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கிய மூன்று இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்செங்கோட்டை அடுத்த பால்மடை பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞா்களை பயணிகள் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞா்கள் பயணிகளுக்கு ஆதரவாக பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநா் கண்ணன் மற்றும் நடத்துநா் மெய்யழகன் ஆகியோரை தாக்கினா். இதில் காயமடைந்த இருவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

புகாரின்பேரில், இதுதொடா்பாக பால்மடை பகுதியைச் சோ்ந்த விஜய் (27), தனுஷ் (26) வையப்பமலை பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் (26) ஆகியோரை திருச்செங்கோடு ஊரக போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.