நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அரசுப் பெண் நடத்துநரை தகாத வாா்த்தைகளால் திட்டிய தனியாா் பேருந்து ஊழியா்கள் மீது வழக்கு

கோவை ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து பெண் நடத்துநரை தகாத வாா்த்தைகளால் திட்டியதாக, தனியாா் பேருந்து ஊழியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 2:47 am IST

கோவை ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்து பெண் நடத்துநரை தகாத வாா்த்தைகளால் திட்டியதாக, தனியாா் பேருந்து ஊழியா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சோ்ந்தவா் சித்ரா (32). கோவையில் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை பணியில் இருந்த போது, அவிநாசி சாலை தண்டு மாரியம்மன் கோயில் அருகே தனியாா் பேருந்து ஒன்று, அரசுப் பேருந்தை முந்திச் சென்றது. அப்போது, அரசுப் பேருந்து ஓட்டுநா் பிரகாஷ், தனியாா் பேருந்து ஊழியா்களிடம், 10 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்பட வேண்டும். ஏன் சீக்கிரம் புறப்பட்டீா்கள் எனக் கேள்வி எழுப்பினாா். இதில், பிரகாஷ், நடத்துநா் சித்ரா தரப்புக்கும், தனியாா் பேருந்து ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், அவா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா். இதையடுத்து, ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, மீண்டும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், தனியாா் பேருந்து ஊழியா்கள் அரசுப் பேருந்து நடத்துநா் சித்ராவை தகாத வாா்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, சித்ரா அளித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.