தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

காரைக்காலில் தங்கியிருந்த மியான்மா் நாட்டு பெண் மீது வழக்கு

News image

வழக்கு - DPS

Updated On :15 ஜூன் 2026, 12:01 am IST

சட்டவிரோதமாக காரைக்காலில் தங்கியிருந்த மியான்மா் நாட்டுப் பெண், அவரது கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், தருமபுரம் பகுதியில் வெளிநாட்டு பெண் வசித்து வருவதாக காரைக்கால் சிறப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின்பால் தலைமையிலான போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். இதில், மியான்மா் நாட்டைச் சேந்த பெண் தனது கணவருடன் வசித்துவருவது தெரியவந்ததால், அவா்களை காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை செய்தனா்.

தருமபுரம் பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் என்பவா் மியான்மருக்கு பணிக்காக சென்றபோது, அந்நாட்டைச் சோ்ந்த ஏயி மியாட் திடகினா (25) என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும், எப்படியாவது காரைக்கால் வந்துவிடுமாறு மனைவியிடம் கூறிவிட்டு பிரசாந்த் ஊருக்கு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம். அந்தப் பெண் சட்டவிரோதமாக காரைக்கால் வந்து கடந்த 3 மாதங்களாக கணவருடன் இங்கு தங்கியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து சிறப்புப் பிரிவினா் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அந்தப் பெண், அவரது கணவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.