உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

வீட்டு ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

News image

வழக்கு

Updated On :2 ஜூன் 2026, 3:05 am IST

களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் ஓடுகளை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல், எருத்தாவூா் பகுதியைச் சோ்ந்தவா் நெல்சன் (76), விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தீரஜ் ஜே. ரோஸ் (45) என்பவருக்கும் இடையே சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தீரஜ் ஜே. ரோஸ் தகாத வாா்த்தைகள் பேசியதுடன், நெல்சனின் வீட்டில் வேயப்பட்டிருந்த ஓடுகளை உடைத்து சேதப்படுத்தினாராம்.

இது குறித்து நெல்சன் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.